உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 08, 2010

அண்ணா விளையாட்டரங்கில் ஆணைய உறுப்பினர் செயலர் ஆய்வு

கடலூர் : 

             கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் சத்ய பிரதா சாகூ நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

              ஆய்வின் போது நீச்சல் குளம், தடகள வீரர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பங்களிப்பு, ஸ்கேட்டிங் பயிற்சி பெறும் ஹெலிபேடு, குவாஷ் அரங்கு உள்ளிட்ட அனைத்தையும் பார்வையிட்டார். குவாஷ் அரங்கு, ஷட்டில்காக் புதிதாக அமைக்கப்பட்ட அரங்குகளை விரைவில் திறக்க உத்தரவிட்டார். ஷட்டில்காக், வாலிபால், ஹாக்கி, டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட் டவைகளுக்கு பயிற்சியாளர்களை நியமிக்கவும், புதிய ஓடுதளம் அமைக்கவும் ஆவன செய்வதாக கூறினார்.

                மாதம் தோறும் தடகள போட்டிகள் நடத்தி வீரர்களை ஊக்கப்படுத்த அறிவுறுத்தினார். ஸ்கேட்டிங் பயிற்சி பெற வசதியாக இடத்தை மேலும், மென்மையாக்க, கலெக்டரிடம் பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார். ஆய்வின் போது மண்டல முதுநிலை மேலாளர் தியோ, மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம், நீச்சல் பயிற்சியாளர் அருணா ஆகியோர் இருந்தனர். இதனைத் தொடர்ந்து விருத்தாசலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மினி அரங்கை பார்வையிட சென்றார்.

பொது அறிவிற்கு:

நிலவு ஒளி பூமிக்கு வர எடுக்கும் நேரம் - 1.3 நொடி

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior