உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 08, 2010

விவசாயிகள் குறை கேட்பு கூட்டம்

சிறுபாக்கம் : 

             மங்களூர் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் வட்டார அளவில் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடந்தது.

               மங்களூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். தோட்டக்கலை அலுவலர்கள் கோவிந்தராசு, செல்வகுமார் முன்னிலை வகித்தனர். உதவி அலுவலர் டென்சிங் வரவேற்றார். மங்களூர் கால்நடை மருத்துவ அலுவலர் சுப்ரமணியன், வேளாண் அலுவலர்கள் கோவிந்தசாமி, கோவிந்தராசு, விவசாயிகள் ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

               கூட்டத்தில் வேளாண் மானிய திட்டத்தில் இடுபொருட்கள், கருவிகள், பூச்சி மருந்துகள், விதைகள் குறித்து தகவல் பலகை வைக்கவும், சிவப்பு சந்தனம் பயிரிட கன்றுகள் அரசு அங்கீகரிக் கப்பட்ட, அரசு சார்ந்த மற்றும் தனியார் பண்ணைகளில் மரக் கன்றுகளை ரசீதுடன் பெற்று வேளாண் அலுவலகத்தில் சமர்ப்பித்தால் மானியம் வழங்கப்படும். தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் 50 சதவீத மானிய விலையில் ஜிப்சம், சிங் சல்பேட், வேர்க்கடலை பயிர்களுக்கு நுண்ணூட்ட உரக் கலவை அடங்கிய 5 கிலோ மினி கிட் உள்ளிட் டவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பொது அறிவிற்கு:
சிவப்பு கிரகம் என அழைக்கப்படுவது - செவ்வாய்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior