உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 08, 2010

போலீசார் ஒழுக்கத்தை கடைபிடிக்க எஸ்.பி., உத்தரவு


சிதம்பரம் : 

             கடலூர் மாவட்ட போலீசார் ஒழுக் கத்தை கடைபிடிக்க எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

             போலீசார் பல இடங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக எஸ்.பி., க்கு புகார்கள் வந்துள்ளது. சிதம்பரத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு பாதுகாப்புக்கு வந்த கடலூர் ஆயுதப்படை போலீசார், வாகனத்திற்கு வழிவிடாத இரு கார் கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டது. நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு சென்ற தனிப்படை போலீசார், அங்கு ஒருவரை தாக்க பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது என அடுத்தடுத்து பல சம்பவங்கள் நடந்துள்ளது. மேலும் இரவு ரோந்து செல்வதில்லை, குடிபோதையில் டியூட்டி பார்ப்பது போன்ற தகவல்களும் எஸ்.பி., கவனத்திற்கு வந்தது.

               போலீசாரின் இதுபோன்ற நடவடிக்கையால் கடுப்பான எஸ்.பி., போலீசார் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க கட்டளையிட்டுள்ளார். வாரம்தோறும் ஒவ்வொரு போலீஸ் உட்கோட்ட தலையிடத்தில் 'கவாத்து' பயிற்சி கட்டாயம் நடத்த வேண்டும். ஒவ்வொரு போலீஸ் நிலைய அதிகாரிகள் முதல் போலீசார் வரை கட்டாயம் பங்கேற்க வேண்டும். பயிற்சிக்கு வராத போலீசார், அதிகாரிகள் உடனடியாக கடலூர் ஆயுதப்படை பிரிவிற்கு மாற்றப்படுவார்கள். 'கவாத்து' பயிற்சியின் போது, உட்கோட்ட அதிகாரி அறிவுரை வழங்குவதுடன் ஏற்கனவே செய்த தவறுகளை சுட்டிக்காட்டி, கண்டிக்க வேண்டும் போன்ற கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். எஸ்.பி.,யின் இந்த அதிரடி உத்தரவால் மாவட்ட போலீசார் கதிகலங்கி உள்ளனர்.

பொது அறிவிற்கு
கண்ணால் பார்க்க கூடிய கிரகம் - செவ்வாய்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior