உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 05, 2010

ஓய்வு பெற்ற சப் கலெக்டர் வீட்டில் ரூ.2.5 லட்சம் நகை திருட்டு

கடலூர் : 

                    கடலூரில் ஓய்வு பெற்ற சப் கலெக்டரின் வீட்டின் பூட்டை உடைத்து 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

                   கடலூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் வீரராகவன். ஓய்வு பெற்ற சப் கலெக்டர். இவரது மனைவி கல்யாணி. இவர்கள் 2 நாட்களுக்கு முன் வீட்டை பூட்டிக் கொண்டு சென்னை சென்றிருந்தனர். நேற்று முன்தினம் மாலை தெருவை பெருக்க வேலைக்கார பெண் வந்தபோது பூட்டு உடைந்திருந்தது. தகவலறிந்த கடலூர் டி.எஸ்.பி., மகேஷ்வரன் மற்றும் கடலூர் புதுநகர் போலீசார் தடயங்களை சேகரித்தனர். இந்நிலையில் வீடு திரும்பிய கல்யாணி அறைக்கு சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 25 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது. இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior