உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 05, 2010

மானிய விலையில் தானிய சேமிப்புக் கலன்கள் விநியோகம்


கடலூர்:

             கடலூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் தானிய சேமிப்புக் கலன்கள் வழங்கப்படும் என்று, வேளாண் துறை வியாழக்கிழமை அறிவித்து உள்ளது.

வேளாண் உதவி இயக்குநர் சீ.இளவரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                 தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில், தானிய சேமிப்புக் கலன்கள் 50 சதவீதம் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகின்றன. ஒரு மெட்ரிக் டன், 0.5 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இந்த தானிய சேமிப்புக் கலன்களைப் பெற, விரும்பும் விவசாயிகள் கடலூர், கீழ்குமாரமங்கலம் மற்றும் தூக்கணாம்பாக்கம் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்கள் மற்றும் வேளாண் அலுவலர்களைத் தொடர்பு கொண்டு தானிய சேமிப்புக் கலன்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

 


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior