
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே வாங்கப்பட்ட சீலிடப்பட்ட "பெப்ஸி' குளிர்பான பாட்டிலில் இறந்த நிலையில் தவளை கிடந்தது.சிதம்பரத்தை அடுத்த பி.முட்லூரைச் சேர்ந்தவர் அஸ்கர்அலி (35).
இவர் வெள்ளிக்கிழமை பி.முட்லூரில் உள்ள கடை ஒன்றில் 600 மில்லி "பெப்ஸி' குளிர்பான பாட்டிலை வாங்கினாராம். மூடியை திறப்பதற்கு முன் அதில் தவளை மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். உடனே அக்கடைக்குச் சென்று அப்பாட்டிலை வாங்கியதற்கான ரசீதை வாங்கியுள்ளார். பாட்டிலில் தவளை கிடந்தததால் தனக்கு மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டது. அதை குடித்திருந்தால் எனக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருக்கும். எனவே அக்கடை உரிமையாளர் மற்றும் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர உள்ளதாக அஸ்கர்அலி தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக