உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 05, 2010

வெள்ளாற்றில் மணல் திருட்டு ஒருவர் கைது

கடலூர் : 

                 சிதம்பரம் அருகே வெள்ளாற்றில் அரசு அனுமதியின்றி மணல் எடுத்த ஆசாமியை போலீசார் கைது செய்து டிராக் டரை பறிமுதல் செய்தனர்.

                   ஒரத்தூர் சப் இன்ஸ் பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரத்தூரை அடுத்த சாக்காங்குடி பஸ் நிறுத்தம் அருகே மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி விசாரணை செய்தனர். இதில் அரசு அனுமதியின்றி வெள்ளாற்றங்கரையில் மணல் திருடியது தெரிய வந்தது. இது குறித்து ஒரத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து தாதம்பேட்டையைச் சேர்ந்த சிவமுருகன் (24) என்பவரை கைது செய்தனர். மேலும் மணல் திருட்டுக்கு பயன் படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior