உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 21, 2010

பி.இ.: அரசு கல்லூரி யாருக்கு கிடைக்கும்? பி.சி., எம்.பி.சி.-க்கு எத்தனை இடங்கள்?



             கீழே கொடுக்கப்பட்டுள்ள வகுப்பு வாரியான இடங்களை வைத்து அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் சேர யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். 
 
              தமிழகத்தில் கோவை, சேலம், சிவகங்கை (காரைக்குடி), வேலூர் (பாகாயம்), திருநெல்வேலி, கிருஷ்ணகிரி (பர்கூர்), ஆகிய இடங்களில் 6 அரசு பொறியியல் கல்லூரிகளும், கோவையில் 2, மதுரையில் 1 என 3 அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளும் உள்ளன.  தரமான கல்வி, கல்விக் கட்டணம் உள்ளிட்ட காரணங்களால் அண்ணா பல்கலைக்கழகத்தின் 3 கல்லூரிகள் மற்றும் மேற்கண்ட கல்லூரிகளில் சேருவதற்கு ஆண்டுதோறும் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
 
                 இதனால், அரசு பொறியியல் கல்லூரிகளைப் போன்றே அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளும் கருதப்படுகின்றன.  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் 2010-11-ம் ஆண்டு பி.இ. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய போது,
 
                "2010-11-ம் ஆண்டு பி.இ. ஒற்றைச் சாளர கலந்தாய்வில் அரசு பொறியியல் கல்லூரிகளில் 2,825 பி.இ. இடங்கள், அரசு உதவிபெறும் 3 பொறியியல் கல்லூரிகளில் 1,544 பி.இ. இடங்கள் உள்ளன' என்று கூறினார். 
 
              மொத்தமுள்ள 100 சதவீத பி.இ. இடங்களில் 69 சதவீத இடங்கள் பி.சி.,எம்.பி.சி., என இட ஒதுக்கீடுகளுக்கும், 31 சதவீத இடங்கள் ஓ.சி. பிரிவுக்கும் ஒதுக்கப்படுகின்றன.  ஓ.சி. என்பது முற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்.பி.சி.),தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.) என அனைத்துப் பிரிவினரும் இதில் அடங்குவர்.  இவற்றை வைத்து, ஓ.சி., பி.சி., பி.சி. (முஸ்லிம்), எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.சி. (அருந்ததியர்), பழங்குடியினர் என வகுப்பு வாரியாக இடங்கள் கணக்கிடப்படுகின்றன.  அதன்படி, எல்லாப் பிரிவினரும் போட்டியிடும் ஓ.சி.-க்கு அரசு பொறியியல் கல்லூரிகளில் 876 இடங்களும், அரசு உதவிபெறும் கல்லூரியில் 479 இடங்களும் உள்ளன.
 
கட்ஆஃப் மதிப்பெண் அடிப்படையில்...: 
 
                     அதிகமான கட்ஆஃப் மதிப்பெண் எடுக்க முடியாமல், 197.5-க்கு குறைவாக பெற்றவர்களுக்கு அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி, ஏ.சி.டெக்., குரோம்பேட்டை எம்.ஐ.டி. ஆகியவற்றில் 2020 பி.இ. இடங்கள் உள்ளன. பி.இ. கட்ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ல் தொடங்கி 198 வரை உள்ள மாணவர்கள் இவற்றில் சேருவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior