உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 23, 2010

வெவ்வேறு இடங்களில் சாலை விபத்து : 2 பேர் பலி

விருத்தாசலம் : 

             லாரி மோதி பைக்கில் சென்றவர் இறந்தார். விருத்தாசலம் புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் முருகன் (28). இவர் தனது பைக்கில் விருத்தாசலத்தில் இருந்து எறும்பனூர் நோக்கிச் சென்றார். எறும்பனூர் பாலம் அருகே எதிரே வந்த லாரி முருகன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில் முருகன் அதே இடத் தில் இறந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கடலூர் : 

              கடலூரில் மோட்டார் பைக் மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவர் இறந்தார். கடலூரை அடுத்த குணமங்கலம் மாரியம்மன் கோவிலைச் சேர்ந்தவர் நடேசன் (60). இவர் நேற்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூரிலிருந்து கடலூர் முதுநகர் நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த மோட்டார் பைக் நடேசன் ஓட்டிச் சென்ற சைக்கிள் மீது மோதி படுகாயமடைந்தார். உடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலின்றி இறந்தார். திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior