உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 20, 2010

பண்ருட்டி அருகே கோஷ்டி மோதல்: 19 பேர் மீது வழக்கு

பண்ருட்டி : 

             கோஷ்டி மோதலில் 19 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து இருவரை கைது செய்தனர்.
 
                  பண்ருட்டி அடுத்த ப.புதூர் பகுதியைச் சேர்ந் தவர் செல்வம். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய்காந்தி கடந்த 10 நாட் களுக்கு முன் மினி வேன் வாடகைக்கு எடுத்துச் சென்றார். அதற்கான பணத்தை நேற்று முன்தினம் செல்வத்திடம் கொடுக்கும் போது வாடகை அதிகமாக இருப்பதாக கூறினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த லட்சுமணன், செல்வத் திற்கு  ஆதரவாக பேசியதால்  இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதில் லட்சுமணன், சிவபெருமான் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். குறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் 19 பேர் மீது வழக்குப் பதிந்து சஞ்சய்காந்தி (33) தவபாலன் (33) ஆகியோரை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior