உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 20, 2010

கடலூர் மைதானத்தில் இரவு நேரத்தில் மினி "பார்' போலீசார் நடவடிக்கை; முதியவர்கள் கவலை

கடலூர் : 

        கடலூர் மைதானத்தில் கூடுபவர்களை போலீசார் விரட்டியடிப்பதால் முதியவர்கள் கவலையடைந்துள்ளனர்.
 
            கடலூர் நகரத்தின் மையத்தில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந் துள் ளது தங்கராஜ் முதலியார் மைதானத்தில் மாலை நேரங்களில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலர் "ரிலாக்சாக' காற்று வாங்குவதற்காக உட் கார்ந்து பேசுவது வழக்கம். அதேப்போல் வேலை முடித்து விட்டு வருபவர்கள் மறைவில் நின்று  பேசுவதும், இரவு நேரங்களில் இளைஞர்கள் உற்சாக பானம் அருந்துவதும் அதிகரித்து வருகிறது.
 
              இது குறித்து போலீசாருக்கு பல புகார்கள் வந்தன. அதையொட்டி புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆரோக் கியராஜ் தலைமையில் போலீசார் மைதானத்தில் பேசிக்கொண்டிருந்தவர்களை விரட்டியடித்து வருகின்றனர். மேலும் மைதானத்தில் இரவு 7.30 மணிக்குமேல் யாரும் உட்காரக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமூக விரோதிகளுக்காக போலீசார் எடுத்த நடவடிக்கையில் ஓய்வு பெற்ற முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  மாலை நேரத்தில் காற்று வாங்கிக் கொண்டு பேசி மகிழ வருகிறோம். அதற்காகத்தான் இந்த மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.  போலீசாரின் இத்தகைய நடவடிக்கை எங்களை புண்பட செய்துள்ளது என கவலை தெரிவித்துள்ளனர். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior