உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 20, 2010

கடலூர் மத்திய சிறையில் கைதியிடம் சிம் கார்டு பறிமுதல்

கடலூர் : 
 
           கடலூர் மத்திய சிறையில், நெய்வேலி கோர்ட்டிற்கு சென்று திரும்பிய கைதியிடமிருந்து இரண்டு சிம் கார்டுகளை, சிறை போலீசார் கைப்பற்றினர்.

              நெய்வேலி அடுத்த தென்புதூர் வானதிராயபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஆனந் தன்(28). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன், நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்காக ஆனந்தனை, கடலூர் மத்திய சிறையிலிருந்து போலீசார் நெய்வேலி கோர்ட்டிற்கு அழைத்துச் சென்றனர். விசாரணை முடித்து ஆனந்தனை இரவு மீண்டும் சிறையில் ஒப்படைத்தனர்.
 
              அப்போது, சிறை நுழைவாயிலிலிருந்த சிறைத் துறை போலீசார், ஆனந்தனை சோதனை செய்தபோது அவர் மறைத்து வைத்திருந்த இரண்டு சிம் கார்டுகளை கைப்பற்றினர். இது குறித்து கடலூர் மத்திய சிறை அலுவலர் வேணுகோபால் (பொறுப்பு) கொடுத்த புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior