உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 20, 2010

கடலூரில் நூலகர் இல்லாததால் பூட்டிக் கிடக்குது நூலகம்

கடலூர் : 

          கடலூரில் நூலகர் மருத்துவ விடுப்பில் சென்று விட்டதால் கடந்த 6 நாட்ளாக பூட்டிக் கிடப்பதால் வாசகர்கள் கவலையடைந்துள்ளனர்.
 
           கடலூர் புதுப்பாளையத்தில் தங்கராஜ் நூற்றாண்டு நினைவு நூலகம் இயங்கி வருகிறது. கடலூர் நகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த நூலகத்திற்கு தினசரி 200க்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து செல்கின்றனர். புதன் கிழமை வார விடுமுறையாகும். இங்கு பணியாற்றிய வந்த நூலகர் சேகர் உடல் நிலைக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக கடந்த 14ம் தேதி முதல் மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். அவருக்கு பதிலாக நகராட்சி நிர்வாகம் வேறு நூலகர்களை இங்கு நியமிக்காததால் கடந்த 14ம் தேதி முதல் நூலகம் பூட்டியே கிடக்கிறது.
 
                இதனால் நூலகத்திற்கு அன்றாடம் வரும் வாசகர்கள் பெருத்த ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளனர். மருத்துவ விடுப்பில் சென்றுள்ள நூலகர் மீண்டும் பணிக்கு வரும் வரை தற்காலிகமாக வேறு நூலகர்களை நியமித்து, நூலகத்தை திறக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior