உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 20, 2010

சிதம்பரத்தில் பாதாள சாக்கடை குழாய்கள் அடைப்பு சீரமைப்பு

சிதம்பரம் : 

            சிதம்பரத்தில் பாதாள சாக்கடை குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நகராட்சி சார்பில் சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    
               சுற்றுலாத் தலமான சிதம்பரத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பே பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப திட்டம் செயல்படுத்தப்பட்டு சுகாதாரம் பேணி காக்கப் பட்டது. ஆனால் மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் முறையான பராமரிப் பின்றி பாதாள சாக்கடைத் திட்டம் முற்றிலுமாக செயலிழந்து விட்டது. நகர வீதிகளில் பாதாள சாக்கடை குழாய்கள் அடைத்துக் கொண்டு "மேன்ஹோல்' வழியாக கழிவுநீர் வெளியேறி சாலைகளில் வழிந்தோடும் நிலை தொடர்கிறது.

             இந்த அடைப்புகளை எடுக்க நகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து "கம்ப்ரஷருடன்' கூடிய வாகனம் வாங்கியும் கூட சமாளிக்க முடியவில்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் புதிய பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய் யப் பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மழைக்காலம் நெருங்கி விட்ட நிலையில் நகரம் முழுவதும் கழிவுநீர் ஓடும் நிலை ஏற்பட்டுவிடும் என்பதால் பாதாள சாக்கடை அடைப்புகள் "கம்ப்ரஷர்' வாகனம் மூலம் சரி செய்யப்பட்டுவருகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior