உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 20, 2010

இடிந்து விழும் ஆபத்தான நிலையில் விருத்தாசலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் கட்டடம்

விருத்தாசலம் : 

          விருத்தாசலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அலுவலக கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
 
              விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் செல்லும் சாலையின் அருகே விருத்தாசலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இங்கு கடலூர்- திருச்சி, விழுப்புரம் - திருச்சி பாசஞ்சர் ரயில்கள் நின்று போகும். இந்த ஸ்டேஷனில் இருந்து நாள் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர்.
இந்த டவுன் ஸ்டேஷனுக்கான அலுவலகக் கட்டடம் 1994ம் ஆண்டு கட்டப்பட்டது.  இதில் டிக்கெட் கவுன்டர், அலுவலக அறை, பயணிகள் ஓய்வு அறை உள்ளது. இந்த கட்டடம் தற்போது பழுதடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. 

           கட்டடத்தின் மேலே ஆலமரம் வளர்ந்து அதன் வேர்கள் கட்டட சுவற்றுக்குள் சென்றதால் ஆங்காங்கே சுவரில் விரிசல் காணப்படுகிறது. இதனால் எப்போது இடிந்து விழும் என தெரியாத அபாய நிலை உள்ளது. மக்கள் தினமும் அலுவலக அறைக்குச் சென்று டிக்கட் எடுக்க பயன்படுத்தும் இந்தக் கட்டடம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் கட்டடத்தின் மேல் உள்ள மரத்தினை அகற்றி, கட்டடத்தை முறையாக பராமரிக்க ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior