உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 20, 2010

சிதம்பரம் அடுத்த கிள்ளையில் போலீசார் பற்றாக்குறை: பணிகள் பாதிப்பு

கிள்ளை : 

               சிதம்பரம் அடுத்த கிள்ளை போலீஸ் ஸ்டேஷனில்  போதிய போலீசார் இல்லாததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
 
             சிதம்பரம் அடுத்த கிள்ளை போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடற்கரையோரம் இப்பகுதி இருப்பதால்  இயற்கை இடர்பாடு உள்ளிட்ட அவசர பணிகளுக்கு விரைந்து செல்ல முடியாமல் போலீசார் திணறினர்.
 
             இதனால் கடந்த 2008ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது மாவட்ட நிர்வாகத்தால் ஜீப் வழங்கப்பட்டது. தற்போது கிள்ளை போலீஸ் ஸ்டேஷனில் போதிய போலீசார் இல்லாமல் புகார் மனுக்களை பெற முடியாமலும், அவசர காலத்திற்கு ஜீப்பில் செல்ல டிரைவர் இல்லாததால் போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்தவர்களைக் கொண்டு இயக்கும் நிலை உள்ளது. அத்துடன் அடிக்கடி ஜீப் பழுதடைந்து விடுவதால் இரவு நேரத்தில் வெளியில் எடுத்து செல்ல முடியாமல் பணியில் இருக்கும் சொற்ப அளவிலான போலீசாரும் தவித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior