உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 20, 2010

அண்ணாமலைப் பல்கலையில் ரூ.2 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

சிதம்பரம்:
   
              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ரூ. 2 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். துணைவேந்தருடன் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, வேளாண்புல முதல்வர் ஜே.வசந்தகுமார் உள்ளிட்டோர் உடன் சென்று பார்வையிட்டனர்.

இது குறித்து துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தது: 

              அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடலூர் மாவட்டத்திலேயே முதல்முதலாக ரூ. 2 கோடி செலவில் கழிவுநீரை சுத்தப்படுத்தும் இரண்டு சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துள்ளது. மருத்துவமனைõலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மாணவர்கள் விடுதி, அலுவலர்கள் குடியிருப்பிலிருந்து வெளியேறும் கழிவுநீர், நவீனமுறையில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு தூயநீராக மாற்றம் செய்யப்படும். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior