உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 04, 2009

1008 பேருக்கு அஷ்​ட​லட்​சுமி மகா​யந்​தி​ரம்

சிதம் ​ப​ரம்,​  டிச. 3:​  

                ஸ்ரீ சந்​துரு சுவா​மி​க​ளால் உரு​வாக்​கப்​பட்ட அஷ்​ட​லட்​சுமி மகா​யந்​தி​ரம் 1008 குடும்​பங்​க​ளும் வழங்​கப்​பட்​டது.

                  ந ​ட​ரா​ஜர் கோயி​லில் ஒரு நாளும் இடை​வி​டா​மல் 1171 நாள்​க​ளுக்கு மேலாக தொடர் அங்​கப்​பி​ர​தட்​சி​னம் செய்​து​வ​ரு​கி​றார் ஸ்ரீ சந்​துரு சுவா​மி​கள். இவ​ரால் உரு​வாக்​கப்​பட்ட அஷ்​ட​லட்​சுமி மஹா​யந்​தி​ரம் பக்​தர்​க​ளுக்கு வழங்​கும் நிகழ்ச்சி கீழ​சன்​ன​தி​யில் புதன்​கி​ழமை நடை​பெற்​றது.÷க​ட​லூர் மாவட்ட ஐயப்ப சேவா சங்​கத் தலை​வர் ஆடிட்​டர் கே.நட​ராஜ பிரபு,​ ராஜேஸ்​வரி நட​ராஜ பிரபு ஆகி​யோர் முன்​னிலை வகித்​த​னர். புதுச்​சேரி முன்​னாள் முதல்​வர் என்.ரங்​க​சாமி பங்​கேற்று 1008 குடும்​பங்​க​ளுக்கு அஷ்​ட​லட்​சுமி மஹா யந்​தி​ரங்​களை வழங்​கிப் பேசி​னார். அப்​போது அவர்,​ மக்​கள் ஆன்​மி​கம்,​ மனி​த​நே​யம் தழைத்​தோங்கி ஒற்​று​மை​யு​டன் வாழ வேண்​டும் என ஸ்ரீ சந்​துரு சுவா​மி​கள் தொடர் அங்​கப்​பி​ர​தட்​சி​ணம் செய்​வது பாராட்​டுக்கு உரி​யது என தெரி​வித்​தார்.

                 இந்​நி​கழ்ச்​சி​யில் மனித உரிமை இயக்க ஒருங்​கி​ணைப்​பா​ளர் லோக​ந​டே​சன் உள்​ளிட்​டோர் பெருந்​தி​ர​ளாக பங்​கேற்​ற​னர். பின்​னர் பஞ்​ச​பூத ஸ்தல மண் எடுத்து செய்​யப்​பட்ட 1008 மஹா கல​சங்​களை பக்​தர்​கள் ஏந்தி வர ஸ்ரீ சந்​துரு சுவா​மி​கள் தேரோ​டும் வீதி​க​ளில் அங்​கப்​பி​ர​தட்​சி​ணம் மேற்​கொண்​டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior