உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 04, 2009

ஊராட்சி நூல​கங்​க​ளில் புத்​த​கங்​களை அதி​க​ரிக்க வேண்​டும்

கட ​லூர்,​ ​ டிச. ​ 3:​ 

                      கட​லூர் மாவட்​டத்​தில் உள்ள ஊராட்சி நூல​கங்​க​ளில்,​ புத்​த​கங்​க​ளின் எண்​ணிக்​கையை அதி​க​ரிக்க வேண்​டும் என்று மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் கேட்​டுக் கொண்​டார். ​ ​

                     அண்ணா மறு​ம​லர்ச்​சித் திட்​டத்​தில் கட​லூர் மாவட்​டத்​தில் உள்ள ஊரக விளை​யாட்டு மையங்​கள் மற்​றும் நூல​கங்​கள் பயன்​பாடு தொடர்​பாக ஊராட்சி மன்​றத் தலை​வர்​கள் மற்​றும் பள்​ளித் தலைமை ஆசி​ரி​யர்​க​ளு​டன் கலந்​தாய்​வுக் கூட்​டம் மாவட்ட ஆட்​சி​யர் தலை​மை​யில் புதன்​கி​ழமை நடந்​தது. ​

              கூட்​டத்​தில் ஆட்​சி​யர் பேசி​யது:​ பள்ளி மாண​வர்​கள் தின​மும் ஒரு மணி நேர​மா​வது,​ ​ நூல​கங்​க​ளைப் பயன்​ப​டுத்த வேண்​டும். கல்வி கற்​பது என்​பது கற்​றல்,​ கேட்​டல்,​ படித்​தல் என மூன்று வகைப்​ப​டும். படித்​த​லுக்​குப் பயன்​ப​டு​வது நூல​கங்​கள். ​

                   இந்த நூல​கங்​க​ளில் 2 தின​சரி மற்​றும் 2 வார இதழ்​கள் அவ​சி​ய​மாக இருக்க வேண்டும். நூல​கங்​க​ளில் புத்​த​கங்​க​ளின் எண்​ணிக்​கையை உயர்த்த வேண்​டும். இதற்​காக அனை​வ​ரும் ஒன்​று​கூடி முக்​கி​யப் பிர​மு​கர்​கள் மூலம் நூல​கத்​துக்​குப் புத்​த​கங்​கள் வழங்​கும் விழா,​ நன்​கொ​டை​யாக புத்​த​கங்​கள் வழங்​கும் விழா ஆகி​ய​வற்றை நடத்த வேண்​டும். நூல​கங்​க​ளில் புத்​த​கங்​க​ளின் எண்​ணிக்​கையை உயர்த்​தும் ஊராட்சி மன்​றத் தலை​வர்​கள் பாராட்​டப்​ப​டு​வார்​கள். பொது அறி​வுத் திறனை வளர்க்க நூல​கங்​கள் அவ​சி​யம். மாண​வர்​கள் ஆசி​ரி​யர்​க​ளி​டம் பயில்​வ​தை​விட பொது அறிவை நூல​கத்​தில் படித்து அதி​கம் வளர்த்​துக் கொள்ள முடி​யும் என்​றார் ஆட்​சி​யர். ​

கூட்​டத்​தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முக​மைத் திட்ட அலு​வ​லர் எஸ்.ராஜஸ்ரீ,​ ​ உத​வித்​திட்ட அலு​வ​லர்​கள் செல்​வ​பெ​ரு​மாள்,​ எம்.சேக​ரன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior