உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 04, 2009

கலை​ஞர் காப்​பீட்​டுத் திட்​ட​ முதற்கட்​டப் பணி நிறைவு

கட ​லூர்,​ டிச.3: 

                     முதல்​வர் கலை​ஞ​ரின் உயிர்​காக்​கும் உயர் மருத்​துவ சிகிச்சை காப்​பீட்​டுத் திட்​டத்​தில் கட​லூர் மாவட்​டத்​தில் முதல் கட்​டப் பணி​கள் நிறைவு பெற்று விட்​ட​தாக மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் அறி​வித்​தார். ​   ஆட்​சி​யர் வியா​ழக்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​ முதல்​வர் கலை​ஞ​ரின் காப்​பீட்​டுத் திட்​டத்​தில் பய​னா​ளி​கள் பட்​டி​யல் தயா​ரிக்​கும் பணி,​ 30-8-2009-ல் தொடங்கி நடந்து வரு​கி​றது.   இ​தில் முதல் கட்​டப் பணி 2-12-2009-ல் முடி​வ​டைந்து உள்​ளது. 2-ம் கட்​டப்​பணி ஒரு வாரத்​தில் தொடங்​கும்.      


                             முதல் கட்​டப் பணி​யில் எவ​ரே​னும் புகைப்​ப​டம் எடுக்​கா​மல் விடு​பட்டு இருந்​தால்,​ 2-ம் கட்​டப் பணி​யின் போது புகைப்​ப​டம் எடுத்து திட்​டத்​தில் பய​ன​டை​யு​மாறு கேட்​டுக் கொள்​ளப்​ப​டு​கி​றார்​கள். ​     ஏற்​கெ​னவே புகைப்​ப​டம் எடுத்​துக் கொண்​ட​வர்​க​ளுக்கு அடை​யாள அட்டை வழங்​கப்​பட்டு வரு​கி​றது.     26 நல வாரி​யங்​க​ளின் உறுப்​பி​னர்​க​ளும் ரூ. 72 ஆயி​ரத்​துக்​குக் கீழ் ஆண்டு வரு​வாய் உள்​ள​வர்​க​ளும் பயன் பெறும் வகை​யில் திட்​டம் செயல்​ப​டுத்​தப் படு​கி​றது.     

                 ரூ. 72 ஆயி​ரத்​துக்கு மேல் ஆண்டு வரு​வாய் உள்​ள​வர்​கள்,​ அரசு ஊழி​யர்​கள்,​ இ.எஸ்.ஐ. திட்ட உறுப்​பி​னர்​கள் பயன்​பெ​றத் தகுதி அற்​ற​வர்​கள்.    எ​னவே தகுதி அற்​ற​வர்​கள் இதில் அடை​யாள அட்டை பெற்று இருந்​தால்,​ தாங்​க​ளா​கவே முன் வந்து,​ திரும்ப ஒப்​ப​டைக்​கு​மாறு கேட்​டுக் கொள்​ளப்​ப​டு​கி​றார்​கள் பின்​னர் விவ​ரம் தெரிந்​தால் குற்​ற​வி​யல் நட​வ​டிக்கை தொடர ஏது​வா​கும் என்​றும் செய்​திக் குறிப்பு தெரி​விக்​கி​றது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior