உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 04, 2009

ஹோட்​டல்​க​ளில் காய்ச்​சிய குடி​நீர் வழங்க வேண்​டு​கோள்

சிதம் ​ப​ரம்,​ டிச. 3:​ 
 
                   கட​லூர் மாவட்​டத்​தில் பர​வி​வ​ரும் விஷக்​காய்ச்​சலை தடுக்​கும் பொருட்டு அனைத்து ஹோட்​டல்​க​ளி​லும் பொது​மக்​க​ளுக்கு காய்ச்​சிய குடி​நீரை வழங்க மாவட்ட நிர்​வா​கம் நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும் என தமிழ்​நாடு நுகர்​வோர் குழு​மச் செய​லா​ளர் சி.டி.அப்​பாவு கோரிக்கை விடுத்​துள்​ளார்.
 
              இ​து​கு​றித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்கை:​ கட​லூர் மாவட்​டத்​தில் விஷக் காய்ச்​சல் அதி​வே​க​மாக பரவி வரு​கி​றது. குடும்​பத்​தில் ஒரு​வ​ருக்கு காய்ச்​சல் வந்​தால் அனை​வ​ருக்​கும் பர​வி​வி​டு​கி​றது. காய்ச்​சல் வந்து போன பிறகு மூட்​டுவலி ஏற்​பட்டு அந்த வலி​போக பல மாதங்​கள் ஆகி​றது. எனவே காய்ச்​சிய குடி​நீரை பொது​மக்​கள் அனை​வ​ரும் பருக சுகா​தா​ரத்​துறை மூலம் அறி​வு​றுத்த வேண்​டும். மாவட்​டத்​தில் உள்ள ஹோட்​டல்​கள்,​ திரை​ய​ரங்​கு​கள்,​ டீக்​க​டை​கள்,​ பள்​ளி​கள் உள்​ளிட்ட பகு​தி​க​ளில் காய்ச்சி குடி​நீரை பயன்​ப​டுத்த மாவட்ட நிர்​வா​கம் உத்​த​ரவு பிறப்​பிக்க வேண்​டும் என சி.டி.அப்​பாவு தெரி​வித்​துள்​ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior