உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 04, 2009

பக்​ரைனில் கொலையுண்ட இளைஞ​ரின் உடலை மீட்க கட​லூர் எம்.பி. கடி​தம்

சிதம்​ப​ரம், ​டிச. 3: 

                         பக்​ரைன் நாட்​டில் கொலை செய்​யப்​பட்ட சிதம்​ப​ரம் வாலி​பர் உட​லைக் கொண்டு வர ஏற்​பாடு செய்​யு​மாறு இந்​திய அரசு உள்​து​றைச் செய​லா​ள​ருக்கு கட​லூர் எம்.பி. கே.எஸ்.அழ​கிரி கடி​தம் அனுப்​பி​யுள்​ளார்.

              சி​தம்​ப​ரத்தை அடுத்த சி.முட்​லூர் அம்​மன் கோயில் தெரு​வைச் சேர்ந்த சொக்க​லிங்​கத்​தின் மகன் ராஜ்​மோ​கன் ​(25). கடந்த இரண்டு ஆண்​டு​க​ளாக பக்​ரைன் நாட்​டில் மொராக் நக​ரத்​தில் தினக்கூ​லி​யாக பணி​யாற்றி வந்​தார்.÷பக்​ரைன் நாட்​டில் தமி​ழர்​களை மிரட்டி பணம் பறிக்​கும் கும்​பல் ராஜ்​மோ​கனை கடந்த வாரம் கழுத்தை அறுத்து கொலை ​ செய்​த​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.

              இது குறித்து ராஜ்​மோ​க​னின் அண்​ணன் எஸ்.மணி​கண்​ட​னுக்கு தக​வல் வந்​துள்​ளது. தனது தம்​பி​யின் உடலை மீட்​டுத் தரு​மாறு கட​லூர் மாவட்ட ஆட்​சி​ய​ருக்கு எஸ்.மணி​கண்​டன் கடி​தம் அளித்​துள்​ளார்.

               மே​லும் கட​லூர் எம்.பி. கே.எஸ்.அழ​கிரி சிதம்​ப​ரம் வாலி​பர் ராஜ்​மோ​கன் உடலை மீட்டு தமி​ழ​கத்​துக்​குக் கொண்டு வர ஏற்​பாடு செய்​யும்​படி உள்​து​றைச் செய​லா​ள​ருக்கு கடி​தம் அனுப்​பி​யுள்​ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior