உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 04, 2009

லாக்​க​ரில் இருந்த 51 பவுன் நகை மோசடி

சிதம் ​ப​ரம்,​ டிச. 3: 
     
     சிதம்​ப​ரத்​தில் இறந்து போன​வர் பெய​ரில் வங்கி லாக்​க​ரில் வைத்​தி​ருந்த ரூ.5 லட்​சம் மதிப்​பி​லான நகை​களை மோசடி செய்​த​தாக வங்கி மேலா​ளர் உள்​ளிட்ட 3 பேர் மீது நகர போலீ​ஸôர் வழக்​குப் பதிவு செய்​துள்​ள​னர். ​÷சி​தம்​ப​ரத்தை அடுத்த வையூர் கிரா​மத்​தைச் சேர்ந்த ராம​சா​மி​யின் மனைவி தில்​லை​யம்​மாள் ​(82). ​ இவ​ரது மகள் ராஜ​லட்​சுமி சிதம்​ப​ரத்​தில் உள்ள வங்கி லாக்​க​ரில் கடந்த 12-3-2009-ல் 51 பவுன் நகையை பாது​காப்​பாக வைத்​தி​ருந்​தார்.
 
                இந்​ நி​லை​யில் ராஜ​லட்​சுமி திடீ​ரென இறந்​து​விட்​டார்,​ லாக்​க​ருக்கு வாடகை செலுத்​து​மாறு ராஜ​லட்​சுமி பெய​ருக்கு வங்​கியி​லி​ருந்து கடி​தம் வந்​துள்​ளது. அந்த கடி​தத்​து​டன் தில்​லை​யம்​மாள் வங்​கிக்​குச் சென்று தனது மகள் பெய​ரில் உள்ள லாக்​கரை திறந்து பார்த்​த​போது அதில் இருந்த 51 பவுன் நகை​கள் இல்​லா​தது கண்டு அதிர்ச்​சி​யுற்​றார்.
  
                    இது குறித்து வங்கி மேலா​ள​ரி​டம் கேட்ட போது அந்த நகை​களை தில்​லை​யம்​மா​ளின் ​ பக்​கத்து வீட்​டில் வசிக்​கும் சோமு,​ வாங்​கிச் சென்​று​விட்​ட​தாக தக​வல் தெரி​வித்​துள்​ளார்.
 
                  இது குறித்து தில்​லை​யம்​மாள் தனது மகள் ராஜ​லட்​சுமி பெய​ரில் லாக்​க​ரில் வைத்​தி​ருந்த நகை​களை சோமு,​ இந்​திரா ஆகி​யோர் மோசடி செய்து எடுத்​துச் சென்​ற​தா​க​வும்,​ அவர்​க​ளி​டம் நகை​களை அளித்த வங்கி மேலா​ளர் ஆகி​யோர் மீதும் நட​வ​டிக்கை எடுக்​கு​மாறு புகார் அளித்​தார்.
 
                  ந​கர போலீ​ஸôர் 3 பேர் மீது வழக்​குப் பதிந்து சோமுவை கைது செய்​த​னர். மேலும் இந்​திரா,​ வங்கி மேலா​ளர் உள்​ளிட்​டோரை தேடி வரு​கின்​ற​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior