உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 04, 2009

கெங்​கை​கொண்​டான் பேரூ​ராட்சி அலு​வ​ல​கத்துக்கு பூட்டு!

நெய்வேலி, டிச. 3: 

                           நெய்​வே​லியை அடுத்த கெங்​கை​கொண்​டான் தேர்​வு​நிலை பேரூ​ராட்சி செயல் அலு​வ​ல​ரைக் கண்​டித்து அப்​ப​குதி பொது​மக்​கள்,​ அலு​வ​ல​கப் பணி​யா​ளர்​கள் மற்​றும் கவுன்​சி​லர்​கள் வியா​ழக்​கி​ழமை ஆர்ப்​பாட்​டம் நடத்தி அலு​வ​ல​கத்தை பூட்​டி​னர்.

              கெங்​கை​கொண்​டான் தேர்வு நிலை பேரூ​ராட்​சி​யின் செயல் அலு​வ​ல​ராக இருப்​ப​வர் கலி​ய​மூர்த்தி.     இவர் மீது அவ்​வப்​போது சில புகார்​கள் எழுந்​த​வண்​ணம் இருந்​தன. இந்​நி​லை​யில் அலு​வ​ல​கத்​துக்கு வரும் பொது​மக்​களை தரக்​கு​றை​வாக பேசு​வது,​ துப்​பு​ர​வுத் தொழி​லா​ளர்​கள்,​ அலு​வ​ல​கப் பணி​யா​ளர்​கள் மற்​றும் கவுன்​சி​லர்​களை அவ​தூ​றா​கப் பேசி​ய​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.÷மே​லும் பேரூ​ராட்​சி​யின் பின்​பு​றம் நடை​பெ​றும் கட்​ட​டப் பணி​க​ளில் பணி​பு​ரி​யும் தொழி​லா​ளர்​களை ஓரி​னச் சேர்க்​கைக்கு அழைத்​த​தா​க​வும் கூறப்​ப​டு​கி​றது.÷இ ​தைத் தொடர்ந்து அப்​ப​குதி பொது​மக்​கள்,​ கவுன்​சி​லர்​கள்,​அலு​வ​ல​கப் பணி​யா​ளர்​கள் மற்​றும் துப்​பு​ர​வுத் தொழி​லா​ளர்​கள் உள்​ளிட்​டோர் இணைந்து வியா​ழக்​கி​ழமை செயல் அலு​வ​ல​ரைக் கண்​டித்து ஆர்ப்​பாட்​டம் நடத்தி,​ அலு​வ​ல​கத்​தைப் பூட்​டி​னர்.

           இ​தை​ய​டுத்து ஊமங்​க​லம் வரு​வாய் ஆய்​வா​ளர் முரளி,​ கிராம நிர்​வாக அலு​வ​லர் கோதண்​ட​பாணி,​ மந்​தா​ரக்​குப்​பம் இன்ஸ்​பெக்​டர் குமார் ஆகி​யோர் பொது​மக்​க​ளி​டம் சம​ர​சப் பேச்சு நடத்​தி​னர்.

           இ​தை​ய​டுத்து பொது​மக்​க​ளி​ட​மி​ருந்து சாவியை வாங்கி,​ மாலை​யில் அலு​வ​ல​கத்தை திறந்​த​னர்.    இது தொடர்​பான புகா​ரை​யும் மாவட்ட ஆட்​சி​யர் மற்​றும் பேரூ​ராட்சி உதவி இயக்​கு​ந​ரி​ட​மும் அளித்​துள்​ள​தா​க​வும் தெரி​கி​றது.

இ​தை​ய​டுத்து மாவட்ட ஆட்​சி​யர் பேரூ​ராட்சி அலு​வ​ல​கத்தை வெள்​ளக்​கி​ழமை பார்​வை​யிட இருப்​ப​தா​கத் தெரி​கி​றது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior