உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 04, 2009

அஞ்சல் ஊழியர் மாநாடு

கடலூர்:

         கடலூரில் தேசிய அஞ்சல் ஊழியர் சங்க தமிழ்நாடு வட்ட மாநில மாநாடு கடலூரில் நேற்று துவங்கியது.

துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா மற்றும் பேரணி நடந்தது. பொதுச்செயலாளர் கிஷன்ராவ் தேசிய கொடியும், சம்மேளன பொதுசெயலாளர் தியாகராசன் சம்மேளன கொடி யும் ஏற்றி வைத்தனர்.


                      தொடர்ந்து நடந்த பேரணிக்கு மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செய லாளர் பிரகாஷ் வரவேற் றார். மாநில செயலாளர் முத்துகிருஷ்ணன் துவக்கவுரையாற்றினர். கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையத்தில் துவங்கிய பேரணி உப்பலவாடியில் நிறைவடைந்தது. மாநாட்டு வரவேற்பு குழு வினோலின் ஷட்ராக், ரமேஷ், மாநில சங்கம் நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், அப்துல்காதிர், விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாளை மாநாடு நிறைவுபெறுகிறது.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior