உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 04, 2009

தேசிய அறி​வி​யல் மாநாட்​டுக்​கு கட​லூர் மாண​வர்​க​ளின் ஆய்​வுக்​கட்​டுரை தேர்வு

கட ​லூர்,​ டிச. 3: 

                     கட​லூர் பள்ளி மாண​வர்​க​ளின் தேனீக்​கள் பற்​றிய ஆய்​வுக் கட்​டுரை மாநில அறி​வி​யல் மாநாட்​டில் அங்​கீ​க​ரிக்​கப்​பட்டு தேசிய அறி​வி​யல் மாநாட்​டுக்​குத் தேர்வு பெற்று உள்​ளது. 

                                 இ​ளம் விஞ்​ஞா​னி​க​ளுக்​கான அறி​வி​யல் மாநாடு மாவட்ட அள​வி​லும் மாநில அள​வி​லும் பின்​னர் தேசிய அள​வி​லும் நடத்​தப்​ப​டு​கி​றது.

                                     பு​ துக்​கோட்​டை​யில் நடந்த மாநில அறி​வி​யல் மாநாட்​டில் கட​லூர் கிருஷ்​ண​சாமி மெட்​ரிக் மேல்​நி​லைப் பள்ளி 11-ம் வகுப்பு மாண​வர்​கள் ஆதித்​யன்,​ அருள்​செல்​வன்,​ மற்​றும் சுதர்​ச​னன் ஆகி​யோர் சமர்ப்​பித்த தேனீக்​கள் குறித்த ஆய்​வுக் கட்​டுரை முதல் இடம் பெற்று,​ தேசிய அறி​வி​யல் மாநாட்​டுக்​குத் தேர்வு செய்​யப்​பட்டு உள்​ளது.

                            இது குறித்​துப் பள்ளி முதல்​வர் ​ ஆர்.நட​ரா​ஜன் வியா​ழக்​கி​ழமை செய்​தி​யா​ளர்​க​ளி​டம் கூறி​யது:​ ​

                                      அண் ​மைக்​கா​ல​மாக கட​லூர் நக​ரில் மாடிக் கட்​ட​டங்​கள்,​ ஆற்​றுப் பாலங்​க​ளின் கீழ்​ப​கு​தி​கள் உள்​ளிட்ட பல இடங்​க​ளில் ராட்​சத தேனீக்​கள் கூடு கட்​டி​யது கண்​டு​பி​டிக்​கப்​பட்டு தீய​ணைப்​புத் துறை​யி​ன​ரால் அ ழிக்​கப்​பட்​டது.

                                 கா​டு​கள் அழிந்து வரு​வ​தால் தேனீக்​கள் அவற்​றின் வாழ்​வி​டங்​களை விட்டு நகர்ப் புறங்​க​ளுக்கு வரு​கின்​றன. ​

                             இந் ​தத் தேனீக்​கள் பற்றி எம் பள்ளி மாண​வர்​கள் பல மாதங்​கள் ஆய்வு செய்​த​னர். வாயு மண்​ட​லத்​தில் உள்ள கார்​பன் வாயுவை உட்​கொண்டு தேனீக்​கள் கூடு​கட்​டு​வது கண்​டு​பி​டிக்​கப்​பட்​டது.

                                         அ​தைத் தங்​கள் ஆய்வு அறிக்​கை​யில் மாண​வர்​கள் சமர்ப்​பித்​த​னர். புவி வெப்​பம் அடை​யக் கார்​பன் கார​ணம் ஆகி​றது. எனவே தேனீக்​கள் வாயு​மண்​ட​லத்​தில் உள்ள கார்​பனை உறிஞ்சி,​ கூடு​கள் கட்​டு​வ​தன் மூலம் புவி வெப்​பம் அடை​வதை,​ கணி​ச​மா​கக் குறைக்​கி​றது என்​பது மாண​வர்​கள் ஆய்​வில் கண்​ட​றி​யப் பட்​டுள்​ளது. ​  தேனீக்​களை வீட்​டுக்கு வீடு வளர்ப்​பதை ஊக்​கு​விப்​ப​தன் மூலம்,​ புவி வெப்​ப​ம​டை​வ​தைத் தடுக்க முடி​யும் என்​பதை நிரூ​பித்​துக் காட்​டிய மாண​வர்​க​ளின் கட்​டுரை,​ குஜ​ராத் மாநி​லம் ஆம​தா​பாத்​தில் டிசம்​பர் 23-ம் தேதி நடக்க இருக்​கும் தேசிய அறி​வி​யல் மாநாட்​டில் சமர்ப்​பிக்​கப்​ப​டும். 

                             க​ட​லூ​ரில் இருந்து மாண​வர்​க​ளின் ஆய்வு அறிக்கை ஒன்று தேசிய மாநாட்​டுக்​குத் ​ தேர்வு செய்​யப்​பட்​டது இதுவே முதல் முறை​யா​கும் என்​றார் முதல்​வர். ஆய்வு அறிக்​கை​யைச் சமர்ப்​பித்த மாண​வர்​களை பள்​ளித் தாளா​ளர் டாக்​டர் கி.ராஜேந்​தி​ரன் முதல்​வர் ஆர்.நட​ரா​ஜன் ஆகி​யோர் பாராட்​டி​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior