உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 04, 2009

திறன் வளர்த்தல் அடிப்படை பயிற்சி

அண்ணாமலைநகர்:

சிதம்பரத்தை அடுத்த டி. புத்தூர் அரசு ஆதிதிராவிட நல துவக்கப்பள்ளியில் பிற்படுத்தப்பட்ட பகுதி மானிய நிதி திறனறிதல் பயிற்சி நான்கு நாட்கள் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், உதவியாளர்களுக்கு முழுசுகாதாரம், எய்ட்ஸ் விழிப்புணர்வு, மகளிர் மேம்பாடு ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

                     மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவன விரிவுரையாளர் வீரராகவன் பயிற்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பயிற்சி பெற்றவர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் சான்றிதழ் வழங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமு பயிற்சியை ஒருங்கிணைந்து நடத்தினார். டி. புத்தூர் ஆட்கொண்டநத்தம், செட்டிகட்டளை, பரிவிளாகம், நெடும்பூர் ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த அறந்தாங்கியில் உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு திறன் வளர்த்தல் பயிற்சி நடந்தது.
மாநில ஊரக வளர்ச்சி துறை வீரராகவன் தலைமை தாங்கி பயிற்சி
யளித்தார். விரிவாக்க அலுவலர் சமூக நல வனசுந்தரி முன்னிலை வகித்தார். இப்பயிற்சி வகுப்பினை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜாராமன் துவக்கி வைத்து ஆலோசனை வழங்கினார். வானமாதேவி, அகரபுத்து£ர், கருணாகரநல்லு£ர், சித்தமல்லி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள், மக்கள் நலப்பணியாளர்கள், எழுத்தர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


பயிற்சியில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு என பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior