உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 21, 2009

இந்​தி​யா​வில் நீரி​ழிவு நோயா​ளி​க​ளின் எண்​ணிக்கை 7 கோடி​யாக உய​ரக்​கூ​டும்

நெய்வேலி, ​​ டிச.​ 19:​ 

                                2015-ம் ஆண்​டில் நமது நாட்​டில் சிறு​நீ​ரக நோயா​ளி​க​ளின் சுமார் 7 கோடி அள​வுக்கு உய​ரக்​கூ​டும் என நெய்​வே​லி​யில் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்ற கருத்​த​ரங்​கில் செங்​கல்​பட்டு மருத்​து​வக் கல்​லூ​ரி​யைச் சேர்ந்த சிறு​நீ​ர​க​வி​யல் துறைத் தலை​வர் டாக்​டர் எட்​வின் பெர்​னாண்டோ தெரி​வித்​தார்.​ ​

                            இந்​தி​யப் பொறி​யா​ளர் கழ​கத்​தின் நெய்​வே​லிக் கிளை​யும்,​​ நெய்வேலி பொறி​யா​ளர் மற்​றும் அறி​வி​ய​லா​ளர் கழ​க​மும் இணைந்து சிறு​நீ​ர​கத்​தைப் பாது​காப்​பீர் எனும் தலைப்​பில் கருத்​த​ரங்கை வெள்​ளிக்​கி​ழமை நடத்​தி​னர்.​

                        இ​ தில் என்​எல்சி திட்​டம் மற்​றும் செய​லாக்​கத்​துறை இயக்​கு​நர் ஆர்.கந்​த​சாமி தலைமை வகித்​தார்.​ செங்​கல்​பட்டு மருத்​து​வக் கல்​லூ​ரி​யைச் சேர்ந்த சிறு​நீ​ர​க​வி​யல் துறைத் தலை​வர் டாக்​டர் எட்​வின் பெர்​னாண்டோ சிறப்பு அழைப்​பா​ள​ரா​கக் கலந்​து​கொண்டு பேசும் போது,​​ நமது நாட்​டில் பரம்​பரை மூல​மாக பர​வும் நோய்​கள் 43.5 சத​வீ​த​மாக இருக்​கை​யில்,​​ பிறர் மூலம் பர​வாத உயர் ரத்த அழுத்​தம்,​​ சர்க்​கரை வியாதி போன்​றவை 44 சத​வீ​த​மாக உயர்ந்​துள்​ளது.​ நமது வாழ்க்கை முறை​யும்,​​ உண​வுப் பழக்க வழக்​கங்​க​ளும் தான் இதற்கு முக்​கி​யக் கார​ணம்.​

                           க​டந்த 2004-ம் ஆண்டு கணக்​கின்​படி உலக அள​வில் தொற்​று​நோய் மூலம் 2 கோடி​பே​ரும்,​​ பிற​ரி​ட​மி​ருந்து பர​வாத நோய் மூலம் 3 கோடி பேரும் இறந்​துள்​ள​தாக ஆய்​வில் தெரி​ய​வந்​துள்​ளது.​ நீ​ரி​ழிவு நோயால் பாதிக்​கப்​ப​டும் உறுப்​பு​க​ளில் முக்​கி​ய​மா​னது சிறு​நீ​ர​கம்.​ உயர் ரத்த அழுத்​தம்,​​ அதிக ரத்​தப் போக்கு,​​ சிறு​நீ​ர​கத்​தில் கட்டி,​​ அதிக எடை,​​ அதிக கொழுப்பு,​​ புகைப் பிடித்​தல் ஆகி​ய​வற்​றால் சிறு​நீ​ர​கம் பாதிக்​கப்​ப​டும் என்​றார் எட்​வின் பெர்னாண்டோ.​

                          முன்​ன​தாக நிகழ்ச்​சி​யில் பொறி​யா​ளர் கழகத் துணைத் தலை​வர் சக்​ர​வர்த்தி வர​வேற்​றார்,​​ பொறி​யா​ளர் மற்​றும் அறி​வி​ய​லா​ளர் கழகச் செய​லர் கென்​னடி நன்றி கூறி​னார்.​ நிகழ்ச்​சி​யில் 300-க்கும் மேற்​பட்ட பொறி​யா​ளர்​கள் பங்​கேற்​ற​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior