உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 21, 2009

தேடப்பட்டுவந்த ரவுடி கைது

 சிதம்பரம், டிச. 20: 
 
                        சிதம்பரம் அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடியை அண்ணாமலைநகர் போலீஸôர் சனிக்கிழமை கைது செய்தனர்.  
 
                              சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடியைச் சேர்ந்தவர் இளவரசன். வேளக்குடி அருகே சனிக்கிழமை வந்துகொண்டிருந்த இவரை வல்லம்படுகையைச் சேர்ந்த முக்கூட்டுமுருகன் என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.900 ரொக்கத்தை வழிபறி செய்ததாகக் கூறப்படுகிறது. முக்கூட்டு முருகன் மீது ஏற்கெனவே வடக்குமாங்குடியில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக வழக்கு உள்ளது. இவையல்லாமல் பல்வேறு காவல் நிலையங்களில் 5 கொலை வழக்குகளும், 3 கொலை முயற்சி வழக்குகளும், 3 வழிப்பறி வழக்குகளும் உள்ளன.  
 
                           கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் அஸ்வின்கோட்னீஷ் முக்கூட்டு முருகனை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் கே.அம்பேத்கர் தலைமையிலான தனிப்படை அமைத்தார். தனிப்படை போலீஸôர் சனிக்கிழமை இரவு வல்லம்படுகை அருகே முக்கூட்டு முருகனை கைது செய்தனர். முக்கூட்டு முருகனைப் பிடித்த தனிப்படை போலீஸôருக்கு மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் பாராட்டு தெரிவித்தார். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior