உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 21, 2009

விழிப்​பு​ணர்வு கூட்​டம்

சிதம்ப​ரம்,​​  டிச.​ 19:​ 
 
                       சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக ஆசி​ரி​யர் மற்​றும் பணி​யா​ளர் கூட்டு நட​வ​டிக்கை குழு ​சார்​பில் விழிப்​பு​ணர்வு கூட்​டம் வியா​ழக்​கி​ழமை நடை​பெற்​றது.​
 
                              பல் ​க​லைக்​க​ழ​கத்​தின் புக​ழை​யும்,​​ பெரு​மை​யை​யும் சீர்​கு​லைக்​கும் வகை​யில் திட்​ட​மிட்டு பரப்​பப்​பட்டு வரும் வீண் வதந்​தி​கள் குறித்​தும்,​​ பட்​ட​ம​ளிப்பு விழாவை சீர்​கு​லைக்க முயற்​சித்​தும் வரு​வதை எதிர்த்து நடை​பெற்ற இக் கூட்​டத்​தில் 6-வது ஊதி​யக் குழு​வின் நிலு​வைத் தொகை வழங்​கு​வது பற்​றிய உண்மை நிலை​கள்.​ 1996-க்கு பிறகு பணி​யில் சேர்ந்​த​வர்​க​ளுக்கு எதி​ரான கருத்​து​கள்,​​ தொன்று தொட்டு பல்​க​லைக்​க​ழ​கத்​தில் ஆசி​ரி​யர் மற்​றும் பணி​யா​ளர்​க​ளுக்கு வழங்​கப்​பட்டு வரும் பதவி உயர்வு,​​ பணிப்​ப​யன்​கள்,​​ வாரி​சு​க​ளுக்கு பணி,​​ குழந்​தை​க​ளுக்கு கல்​விச் சேர்க்கை,​​ கட்​ட​ணச் சலுகை உள்​ளிட்​டவை குறித்து விளக்​க​ம​ளித்து பேசி​னர்.​
 
                              இக்​கூட்​டத்​ தில் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக ஆசி​ரி​யர் நலச்​சங்​கம்,​​ அண்​ணா​ம​லைப் பல்​கலை.​ ஆசி​ரி​யர் முன்​னேற்​றச் சங்​கம்,​​ எஸ்.சி.,​​ எஸ்.டி.​ ஆசி​ரி​யர் அலு​வ​லர் நலச்​சங்​கம்,​தமிழ்​நாடு ஆதி​தி​ரா​வி​டர் மற்​றும் பழங்​கு​டி​யி​னர் நலச்​சங்​கம் உள்​ளிட்ட சங்​கங்​க​ளைச் சேர்ந்த நிர்​வா​கி​கள் பங்​கேற்று பேசி​னர்.​÷கூட்​டுக்​கு​ழு​வின் இந்த விழிப்​பு​ணர்வு பிர​சா​ரக் கூட்​டம் திங்கள்கிழமை வரை தொடர்ந்து நடை​பெ​றும் என அறி​விக்​கப்​பட்​டுள்​ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior