உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 21, 2009

இடிந்து விழும் நிலையில் குடிநீர் தேக்கத் தொட்டி

நெல்லிக்குப்பம் :

               எழுமேடு ஊராட்சியில் குடிநீர் தொட்டி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. அண்ணாகிராமம் ஒன்றியம் எழுமேடு ஊராட்சியில் 30 ஆண்டிற்கு முன் கட்டப் பட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. இதன்மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இத் தொட்டியின் தூண்கள் சேதமானதால் பழுது நீக்கும் பணி சில மாதங்களுக்கு முன் நடந்தது. பணி முடிந்த சில மாதங்களிலேயே தூண்களில் இருந்து சிமென்ட் கான்கிரீட்கள் பெயர்ந்து விழுந்தன. தற்போது தொட்டியின் தூண்களில் உள்ள கம்பிகள் வெளியே தெரிவதால், எந்த நேரத்திலும் தொட்டி இடிந்த விழும் அபாயம் உள்ளது. தொட்டியின் அருகிலேயே வீடுகளும், கோவிலும் உள்ளன. தொட்டி இடிந்து விழுந்தால் பலர் உயிர் இழக்கும் அபாயமும் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior