உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 21, 2009

ஆற்றில் தவறி விழுந்தவர் உடல் கரை ஒதுங்கியது

நடுவீரப்பட்டு : 

         ஆற்றில் தவறி விழந்த ஜோசியரின் உடல் கரை ஒதுங்கியது. கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு காலனியை சேர்ந்தவர் ராஜரத்தினம் (55). ஜோசியரான இவர் நேற்று முன்தினம் மாலை வெளியூர் சென்று விட்டு தனது வீட்டிற்கு வர வானமாதேவி அணைக்கட்டு வழியாக கெடிலம் ஆற்றில் நடந்து வந்தார். அப்போது அணைக் கட்டு பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு இருந்ததால் அதில் ராஜரத்தினம் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்தார். தகவலறிந்த கிராம மக்கள் பல இடங்களில் தேடியும் ராஜரத்தினம் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது உடல் நேற்று காலை கரை ஒதுங்கியது. நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரனை செய்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior