உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 21, 2009

நகை வியாபாரி மீது துப்பாக்கி சூடு

 நெய்வேலி, டிச.20: 
 
                             வடலூரில் நகை வியாபாரியை துப்பாக்கியால் சுட்டு, கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்களை போலீஸôர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.   
 
                           கடலூர்-விருத்தாசலம் சாலை மார்க்கத்தில் உள்ள வடலூர் நான்குமுனை சந்திப்பு பகுதியில் ஸ்ரீலக்ஷ்மி ஜூவல்லரி நடத்தி வருபவர் சிங்காரம் 52). இவர் சனிக்கிழமை வழக்கம் போல் கடையைப் பூட்டிவிட்டு வடலூர் சீத்தாராம் நகரில் உள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.   
 
                         கடையில் இருந்து சிறிது தூரம் சென்றதும், பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் இருவர் சிங்காரத்தை வழிமறித்து, நாட்டுத் துப்பாக்கியைக் காட்டி கையில் இருக்கும் பணத்தை தருமாறு மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிங்காரம் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி கூச்சலிட்டுள்ளார்.   
 
                              சிங்காரத்தின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனால் பதற்றமடைந்த மர்மநபர்கள் சிங்காரத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில், அவரது மார்பில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து மர்மநபர்கள், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை அங்கு விட்டுவிட்டு சிங்காரத்தின் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.   
 
                          துப்பாக்கி குண்டுபாய்ந்ததில் படுகாயமடைந்த சிங்காரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மர்மநபர்களின் மோட்டார் சைக்கிளில் நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெடிகுண்டுகள் எந்த வகையைச் சேர்ந்தது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் வரவிருப்பதாக வடலூர் போலீஸôர் தெரிவித்தனர். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior