உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 21, 2009

மாவட்ட காங்கிரஸ் தலைவர் மீது போலீஸில் புகார்

 சிதம்பரம்,  டிச. 20: 
 
                    மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவுத் தலைவரைத் தாக்கியதாக கடலூர் (தெற்கு) மாவட்ட காங்கிரஸ் தலைவர் மீது சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
                        சிதம்பரம் எம்.கே.தோட்டத்தைச் சேர்ந்தவர் டி.கே.எம்.வினோபா. இவர் கடலூர் மாவட்ட காங்கிரஸ் எஸ்சி., எஸ்டி பிரிவுத் தலைவராக உள்ளார். இவர் சனிக்கிழமை சிதம்பரம் சபாநாயகர் தெருவில் உள்ள ஒர்க் ஷாப்பில் தனது காரை பழுது பார்க்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கடலூர் (தெற்கு) மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.சச்சிதானந்தம், வினோபாவை சட்டையைப் பிடித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வினோபா அளித்த புகாரைப் பதிந்து நகர போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior