உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 19, 2010

அண்ணா நூலகத்துக்கு 10 ஆயிரம் புத்தகங்கள்


நெய்வேலி:

               சென்னையில் அமையவுள்ள அறிஞர் அண்ணா நூலகத்துக்கு வடலூர் ஓபிஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் 10 ஆயிரம் புத்தகங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு,​​ மாணவர் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து புத்தகங்களைச் சேகரிக்கும் பணியில் ஓபிஆர் கல்வி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் அமைய உள்ள அண்ணா நூலகத்துக்கு வடலூர் ஓபிஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் 10 ஆயிரம் புத்தகங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.​ அதன்படி வள்ளலார் குருகுலப் பள்ளியில் பயிலும் 5 ஆயிரம் மாணவர்களிடம் இருந்து புத்தகங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.​ மேலும் ஓபிஆர் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவிகள்,​​ பள்ளி ஆசிரியர்கள்,​​ கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து புத்தகங்களைச் சேகரிக்கும் பணியில் ஓபிஆர் கல்வி நிறுவனத்தின் தாளாளர் ஆர்.செல்வராஜ் ஈடுபட்டுள்ளார். அதன்படி திங்கள்கிழமை வள்ளலார் குருகுலப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளிடமிருந்து புத்தகங்களைப் பெற்றுக்கொண்டார் ஆர்.செல்வராஜ்.​ நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.​ சிறந்த புத்தகங்களை வழங்க ஆர்முள்ளவர்கள் பள்ளி நிர்வாகத்தை அணுகி புத்தகங்களை வழங்கலாம் என செல்வராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior