உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 19, 2010

கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


கடலூர்: 

                கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டிலிருந்து  முதுநகர் மணிக்கூண்டு வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். கடலூர் மஞ்சக்குப்பம் மற்றும் கடலூர் முதுநகர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் கடைகளின் முன்பும், நடைபாதை பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

               இதனால் தேசிய நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என அறிவித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று நெடுஞ்சாலை பொறியாளர்கள் மற்றும் கடலூர் தாசில்தார் தட்சிணாமூர்த்தி முன்னிலையில் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர்கள் ஜெய் சங்கர், முருகன், நகராட்சி ஊழியர்கள் கடலூர் மஞ்சக்குப்பம் மணிக் கூண்டிலிருந்து கடலூர் முதுநகர் வரையுள்ள  நெடுஞ்சாலையின் இருபுறமும்  இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பல இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை கடைகாரர்கள் தாமாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior