உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 19, 2010

விருது பெற்ற சாரண மாணவர்களுக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா

ராமநத்தம்: 

                  சாரணர் விருது பெற்ற மாணவர்களுக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடந்தது. தொழுதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சரவணன், தென்னரசு, மணிவாசன் உள்ளிட்டோர்  சாரணர் இயக்கத் தில் உள்ளனர். இவர்கள் நெய்வேலி என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளியில்  மாவட்ட அளவில் நடந்த ராஜ்ய புரஷ்கர் தேர்வில் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கடந்த 23ம் தேதி கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில்  கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா விருது வழங்கி னார்.

                     விழாவில் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பெருமாள் சாமி, தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் தேவராஜன் உள்ளிட்டோர்  பங்கேற்றனர். சாரண விருது பெற்ற மாணவர்களுக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடந்தது. ரெட் ரிப்பன் கிளப் சிவராஜன், ஆசிரியர் மாயவன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் தென்றல்குமாரி வரவேற்றார். தலைமை ஆசிரியர் இளங்கோவன், விருது பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior