உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 19, 2010

குறிஞ்சிப்பாடி அருகே கார் மோதி சிறுவன் பலி

குறிஞ்சிப்பாடி:

              குறிஞ்சிப்பாடி அருகே அடையாளம் தெரியாத கார் மோதி ஐந்து வயது சிறுவன் இறந்தான். குறிஞ்சிப்பாடி விழப்பள்ளம் காலனியை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகன் அகிலன் (5). இவர் நேற்று மாலை குறிஞ்சிப்பாடி பைபாஸ் சாலையில் சிங்கபூரி நெசவாளர் கூட்டுறவு சங்கம் அருகே சாலையில் நடந்து வந்த போது வடலூரில் இருந்து கடலூர் நோக்கிச் சென்ற அம்பாசிடர் கார் சிறுவன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தான். சிறுவனை மோதிய கார் நிற்காமல் சென்று விட்டது. இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து சிறுவனை மோதிய காரை தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior