உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 19, 2010

காவலர் நல வாரியம் அமைக்க கோரிக்கை


கடலூர்:

           காவலர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று,​​ கடலூர் மாவட்ட காவல்துறை ஓய்வூதியர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கத்தின் சிறப்புக் கூட்டம் கடலூரில் அண்மையில் நடந்தது.​ 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:​

                  காவல்துறையின் ஒட்டுமொத்த நலன்கருதி,​​ ஏற்கெனவே பரிசீலனையில் உள்ள காவலர் நலவாரியத்தை அரசு அமைக்க வேண்டும்.​ ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மருத்துவச் செலவு ஈட்டுத் தொகையை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி ஆணையிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம் உள்ளிட்ட பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.​ ​ ​ காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களில் 80 வயதைத் தாண்டிய 5 பேர்,​​ கூட்டத்தில் கெüரவிக்கப்பட்டனர்.​ நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார்.​ செயலாளர் பி.வடிவேல்,​​ பொருளாளர் கே.மணி,​​ ​ லோகையன்,​​ ஆர்.காசிநாதன்,​​ பி.பாலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior