உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 10, 2010

அரசு மருத்துவமனை சீரமைப்பு பணி அவசர சிகிச்சை பிரிவு இடமாற்றம்


கடலூர் : 

                    சீரமைப்பு பணி காரணமாக கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் 3.25 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக் கும் பணி துவங்கியுள்ளது. அதனையொட்டி அங்கு இயங்கி வந்த விபத்து மற் றும் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு மருத்துவ பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் புறநோயாளிகள் பிரிவு பகுதி 5 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பித்து, நோயாளிகள் அமர இரும்பு நாற்காலிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதனையொட்டி இப்பகுதியில் இயங்கி வந்த மருந்தகம் தோல் நோய் சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டது. புற நோயாளிகள் பிரிவு பழைய மகப்பேறு பிரிவிற்கு மாற்றப்பட்டுள் ளது. சீரமைப்பு பணிகள் ஒரு மாதத்தில் முடியும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior