உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 10, 2010

பயிர்களை நாசம் செய்யும் குரங்குகளை அப்புறப்படுத்த கலெக்டருக்கு மனு


திட்டக்குடி : 

               விவசாய பயிர்களை அழித்து வரும் குரங்குகளை அப்புறப்படுத்திட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் ராமலிங்கம், கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

               பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குரங்குகள் விவசாயிகள் பயிரிடும் வாழை, கரும்பு பயிர்களை முளையிலேயே பிடுங்கியும், கடித்தும் நாசம் செய்கின்றன. தவிர புளி, மா, பலா மரத்தில் பிஞ்சு விடும் கொட்டைகளை கடித்து குதறுவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இது குறித்து கடந்த மாதம் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் நேரடியாக முறையிட்டுள்ளேன். எனவே விவசாய பயிர்களை நாசம் செய்யும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior