உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 10, 2010

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் புதுச்சேரி போலீசாருக்கு நீச்சல் பயிற்சி


கடலூர் : 

                   கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் புதுச்சேரி மாநில போலீசார் நீச்சல் பயிற்சி பெற்று வருகின்றனர். சென்னை அடையாறு மருதம் கமாண்டோ பயிற்சி பள்ளி போலீசார் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள போலீசாருக்கு (ரேஞ் சர் கமாண்டோ) அதிதீவிரப்படை பயிற்சி அளித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள ஐந்து போலீஸ் மண்டலங்களுக்கு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 40 நாட்கள் பயிற்சி அளிக் கப்படுகிறது. புதுச்சேரி மாநில இந்தியன் ரிசர்வ் பட்டாலியன் (ஐ.ஆர்.பி) போலீசார் நான்கு சப் இன்ஸ்பெக்டர் கள் உட்பட 70 பேருக்கு, சென்னை கமாண்டோ பயிற்சி பள்ளி இன்ஸ்பெக் டர் பஞ்சாட்சரம் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் கனகமணி, ரவிநாதன், ஏட்டுகள் பரமேஸ்வரன், ராஜப்பா, மணிகண்டன் ஆகியோர் கடந்த பிப். 1ம் தேதி முதல் பயிற்சி அளித்து வருகின்றனர்.உடற்திறன், ஓட்டம், அனைத்து வகை ஆயுதங்களையும் கையாள்வது, காட்டுக்குள் இருக்கும் எதிரிகளை மறைந்திருந்து தாக்குவது, மலை ஏறுதல், மறைந்திருந்து எதிரிகளை குறி தவறாமல் சுடுவது, பதுங்கி தாக்குவது, போர் தந்திர பயிற்சிகள், வெடிகுண்டு அகற்றுவது, செயலிழக்கச் செய்வது, விலங் குகளிடமிருந்து தற்காத்து கொள்வது, அவை இருக் கும் இடங்களை தெரிந்து கொள்வது, நீச்சல் பயிற்சி உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.ரேஞ்சர் கமாண்டோ பயிற்சி பெற்று வரும் புதுச் சேரி மாநில போலீசார் நேற்று கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி பெற்றனர். இரண்டு நாள் நடக்கும் இப்பயிற்சியில் சென்னை கமாண்டோ பயிற்சி பள்ளி நீச்சல் பயிற்சி யாளர்கள் ஏட்டு காமராஜ் தலைமையில் ஆறுமுகம், கோவிந்த் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியின் போது கடலூர் நீச்சல் பயிற் சியாளர் அருணா உடனிருந்தார். பயிற்சி தொடர்ந்து இன்றும் நடக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior