உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 10, 2010

தெரு வியாபாரிகளுக்கு தனி வாரியம்

பண்ருட்டி:
 
          பண்ருட்டி நகர எல்லைக்குள் சுற்றாடும் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் தங்கள் பெயர்களை மார்ச் 13-ம் தேதிக்குள் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என ஆணையர் கே.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
 
               பண்ருட்டி நகர எல்லைக்குள் சுற்றாடும் மற்றும் நடைபாதை தரைக்கடை வியாபாரிகளின் நலனை மேம்படுத்த அரசு தனி வாரியம் அமைத்துள்ளது. இதன் மூலம் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளவும், அரசின் நலத்திட்ட உதவிகளை முழுமையாக பெறவும், வியாபாரிகளை கூட்டி குழு அமைத்து செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே பண்ருட்டி நகரில் உள்ள சுற்றாடும் மற்றும் நடைபாதை தரைக்கடை வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள சமுதாயப் பிரிவில் தங்களது பெயர், வயது, முகவரி மற்றும் புகைப்படம் ஆகியவற்றை கொடுத்து மார்ச் 13-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என ஆணையர் கே.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior