உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 10, 2010

கடலூர் நகரில் தரமில்லாமல் போடப்பட்ட சாலை உள்வாங்கியது


கடலூர் : 

             கடலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்பட்ட பகுதியில் போடப்பட்ட தார் சாலைகள் தரமில்லாமல் உள் வாங்கியுள்ளது.

               கடலூர் நகரில் பாதாள சாக்கடைப்பணிகள் கடந்த 21.1.2007ம் தொடங்கப்பட்டது. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செய்யப்படும் பணிகள் 31.12.2008ம் தேதி முடித்து நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் மேலும் ஒன்னரை ஆண்டுகள் கூடுதலாகியும் பணிகள் இதுவரை முடிவடையவில்லை. இதற்கிடையே நகர சாலைகள் சின்னபின்னமாகி கிடந்ததால் கடலூர் மக்கள் பட்ட அவஸ்த்தை சொல்லி மாளாது. தற்போது குடிநீர் வடிகால் வாரியம், பாதாள சாக்கடைத்திட்டம் முடிக்கப்பட்ட 170 சாலைகளை நகராட்சி வசம் ஒப்படைத்துள்ளது. அதில் ஒரு சில பகுதிகளில் சாலைகள் போடப்பட்டுள்ளன. ஆனால் தரமில்லாமல் போடப்பட்டுள்ளதால் ஆங்காங்கே சாலைகள் பெயர்ந்தும், பாதாள சாக்கடைத்திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத் தில் உள்வாங்கியும் உள்ளன.
                  குறிப்பாக லோகம் மாள் கோவில் தெருவில் போடப்பட்ட சாலை ஏற்கனவே தோண்டப்பட்ட பள்ளத்தில் மணல் போட்டு நிரப்பாமல் சாலை போட்டதால் சாலை நெடுகிலும் உள் வாங்கியுள்ளது. மஞ்சக்குப்பம் தெற்கு கவரத்தெருவில் போடப்பட்ட சாலை ஆங்காங்கே பெயர்ந்துள்ளது. மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் பள்ளி அருகே மேடு பள்ளங் களாக தரமில்லாமல் சாலை போடப்பட்டுள்ளன. எனவே நகராட்சி நிர்வாகம் தரமான சாலை போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior