உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 10, 2010

.மாற்றுத் திறன் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

விருத்தாசலம் : 

                    விருத்தாசலத்தில் மாற்றுத்திறன் படைத்த பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. விருத்தாசலம் தென் கோட்டை வீதி நகராட்சி நடுநிலை பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத் திறன் படைத்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் கதிர்வேல் மாற்றுத் திறன் படைத்தோருக்கு உபகரணங்களை வழங்கி பேசினார். 

                        மாவட்ட திட்ட துணை ஒருங்கிணைப்பாளர் செல்வம், ஏ.இ.இ.ஓ., பஞ்சநாதன், கூடுதல் ஏ.இ.இ.ஓ., ராஜேஸ்வரி, முருகானந்தம், தலைமை ஆசிரியர் அருள்மொழி, சாந்தி ஜெயின் சிறப்பு பள்ளி குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சந்திரமவுலீஸ்வரன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior