உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 10, 2010

கவுரவ விரிவுரையாளர்கள் கடலூரில் உண்ணாவிரதம்


கடலூர் : 

            கடலூர் அரசு பெரியார் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மூன்று மாதமாக வழங்காமல் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

                   கடலூர் அரசு பெரியார் கல்லூரியில் சுயநிதி பாடப்பிரிவில் பணியாற்றும் கவுரவ விரிவுரையா ளர்கள் 9 பேர் நேற்று முன் தினம் வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாம் நாளான நேற்று சங்க கிளை தலைவர் நடேசன் தலைமையில் கவுரவ விரிவுரையாளர்கள் கல்லூரி வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். இதனால் கல்லூரியில் செய்முறைத் தேர்வுகள் பாதிக்கப் பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior