உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 09, 2010

18-ம் தேதி நெய்வேலியில் ஜெயலலிதா ஆர்ப்பாட்டம்



 
                     தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையைக் கண்டித்து அ.தி.மு.க.​ பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஏப்ரல் 18-ம் தேதி நெய்வேலியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார். 
 
இது குறித்து அ.தி.மு.க.​ பொதுச் செயலாளர் ஜெயலலிதா வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 
                      2001-2006 அ.தி.மு.க.​ ஆட்சிக் காலத்தில் மின் உற்பத்தியில் தமிழகம் முன்னிலையில் இருந்தது.​ 2006 தொடக்கத்தில் தமிழ்நாட்டில் மின் உற்பத்தி நிறுவு திறன் 10 ஆயிரத்து 11 மெகாவாட்டாக இருந்தது.​ 2005-2010-ம் ஆண்டுகளில் கூடுதலாக 5 ஆயிரம் மெகாவாட் உற்பத்தித் திறனை நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஆனால், ​​ 2006 மே மாதம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.​ கடந்த நான்காண்டு கால தி.மு.க.​ ஆட்சியில்,​​ மின் உற்பத்தி நிறுவு திறன் குறைந்திருக்கிறது.தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அனல் மின் நிலையங்கள் அடிக்கடி பழுதடைவது,​​ மத்திய அரசின் தொகுப்பிலிருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு குறைந்திருப்பது,​​ மத்திய அரசு அளிக்க வேண்டிய எரிவாயு ஒதுக்கீடு குறைக்கப்பட்டது ஆகியவையும் தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான மின் வெட்டிற்கு முக்கியக் காரணங்கள்.மே மாதம் வரை மின் வெட்டு தொடரும் என்கிறார் மின் துறை அமைச்சர்.​ 2011 வரை மின் நிலைமை சீராகாது என்கிறார் தலைமைச் செயலாளர்.​ இப்போது மின் வெட்டு நேரம் அதிகரிக்கப்படுகிறது.அ.தி.மு.க. ​ ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் புதிய மின் திட்டங்கள் இல்லை என்பது முற்றிலும் தவறானது.​ தி.மு.க.​ ஆட்சியில் சமர்ப்பிக்கப்பட்ட 2000-2001-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மொத்த மின் உற்பத்தி நிறுவு திறன் 7 ஆயிரத்து 120 மெகாவாட் என்றும்,​​ 2006-2007-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 10 ஆயிரத்து 11 மெகாவாட் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.​ இதிலிருந்து,​​ அ.தி.மு.க.​ ஆட்சிக் காலத்தில் 2 ஆயிரம் மெகாவாட்டுக்கும் மேல் மின் உற்பத்தி நிறுவுத் திறன் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.மின் உற்பத்தி நிறுவுத் திறனை அதிகரிக்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்காததன் காரணமாக,​​ தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தி,​​ பொருளாதார வளர்ச்சி,​​ மாணவர்களின் கல்வி ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.எனவே, ​​ தமிழ்நாட்டை இருளில் மூழ்கடித்துள்ள தி.மு.க.​ அரசைக் கண்டித்தும்,​​ மின் பற்றாக்குறையை சீர் செய்ய வலியுறுத்தியும் அ.தி.மு.க.​ சார்பில் 18.4.2010 அன்று நெய்வேலியில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆர்ப்பாட்டத்துக்கு முன்னதாக,​​ நெய்வேலி நகரியத்தில் அமைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.​ நிறுவனர் எம்.ஜி.ஆர்.​ சிலையை நான் திறந்து வைக்கவுள்ளேன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior