உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 09, 2010

பள்ளி நிர்வாகிகள் சங்க கூட்டம்

 கடலூர்: 

                             அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்க கூட்டம் கடலூர் அடுத்த சுப்பரமணியபுரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மணவாளன் தலைமை தாங்கினார். சுப்ரமணியபுரம் ராமலிங்கர் உயர்நிலைப் பள்ளி நிர்வாகி ராமசுப்ரமணியன், வளையமாதேவி பள்ளி தலைமை ஆசிரியர் ராமலிங்கம், துணை தலைவர் உமாதேவன் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் சிவபூஷ்ணம் வரவேற்றார். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கியதற்கும், சமச்சீர் கல்வியை கொண்டு வந்தமைக்காக தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் கலியபெருமாள், ஜெயவீரபாண்டியன், மோகன், மணிக்கண்ணன், சாம்பசிவம், மணிகண்டன், பாண்டுரங்கள், பழனிவேலு, சேதுமாதவன் உள்ளிட்டோர் கல்வி வளர்ச்சிக்காக அரசின் திட்டங்களை விளக்கி பேசினர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior