உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 09, 2010

புதுப்பேட்டையில் ஆறு மணிநேர மின் தடை: போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு

பண்ருட்டி: 

                    பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் மின்தடை காரணமாக வியாபாரிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் பாரத ஸ்டேட் வங்கி, கூட்டுறவு வங்கி, சார் பதிவாளர் அலுவலகம், பள்ளிக் கூடங்கள், பாரி கரும்பு அலுவலகம், வேளாண்மை விரிவாக்க மையம், மாடர்ன் ரைஸ் மில்கள், ஆயில் மில், உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

                     நகராட்சிக்கு இணையாக இப்பகுதி குடியிருப்பு மக்கள் தொரப்பாடி பேரூராட்சியில் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். ஆனால் கிராமத்திற்கு மின்சாரம் வழங்கும் முறையே புதுப் பேட்டைக்கும் வழங்கப்படுகிறது. அதன் படி தினமும் பகலில் குறைந்தது 6 மணிநேரம் மின்நிறுத்தம் செய்வதால் இப் பகுதி வணிகர்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். இதனால் இப்பகுதி வியாபார சங்க நிர்வாகிகள், நகரத்திற்கு இணையாக மின்சாரம் வழங்க வேண்டும், இல்லையெனில் தொடர் போராட்டம் நடத்துவது என திட்டமிட்டுள்ளனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior