உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 09, 2010

ஜெ., தலைமையில் ஆட்சி: தம்பிதுரை நம்பிக்கை


கடலூர்: 

                      பணம் கொடுத்தால் வெற்றி பெறலாம் என்ற தி.மு.க., வின் திட்டத்தை தமிழக மக்கள் தூக்கியெறிவார்கள் என அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை பேசினார். 

கடலூரில் நடந்த அ.தி.மு.க., செயல்வீரர் கள் கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் எம்.பி., தம்பிதுரை பேசியதாவது: 

                     வரும் சட்டசபை தேர் தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஜெ., தலைமையில் ஆட்சி அமையும். பென்னாகரம் தொகுதியில் வெற்றி பெற மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு பணம் கொடுத்து அவர்களை கேடயமாக பயன்படுத்தி கொண்டனர் ஆளும் கட் சியினர்.

                               பென்னாகரத்தில் அ.தி.மு.க., வெற்றி பெற்றுவிடும் என்ற செய்தி தெரிய வந்ததாலேயே கருணாநிதி அங்கு பிரசாரத்திற்கு சென்றார். கடைசி இரண்டு நாளில் தி.மு.க- பா.ம.க., வினர் சூழ்ச்சி செய்து வாக்காளர்களுக்கு காசு கொடுத்து அ.தி. மு.க., வெற்றியை திசை திருப்பிவிட்டனர். இது திட்டமிட்ட சதி. இடை தேர்தலை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜெ.,வின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். காங்., கட்சியை தன் பக்கம் வைத்துக்கொண்டு வரும் பொது தேர்தலில் கருணாநிதி வெற்றி பெறலாம் என திட்டம் போடுகிறார். தி.மு.க., வுடன் கூட்டணி கூடாது என ராகுல் நினைக்கிறார். 1967ல் பணத்தால் வெற்றி பெறமுடியாது என காங்கிரசிற்கு தமிழக மக்கள் உணர்த் தினர் என பேசினார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior